உயர்தர மாணவர்களுக்கான வீடியோக்கள் எமது YOUTUBE CHANNEL மூலமாக பதிவேற்றப்படுகின்றன. மாணாவர்களுக்கு கற்பதற்கு பயனுள்ளவாறு அமைக்கப்படுகின்றது.

இரண்டாம் உலப் போருக்கான காரணங்கள், போரின் பரவல் மற்றும் அதன் விளைவுகள்.

இதுவரை உலகம் கண்ட போர்களில் மிகவும் கொடிய யுத்தமாக வரலாற்றில் பதியப்பட்ட போராக இரண்டாம் உலகப் போர் காணப்படுகின்றது. ஒரு சில நாடுகளின் ஆசைக்கு அல்லது பழிவாங்கும் எண்ணத்திற்கு முழு உலக நாடுகளும் எதிர்பார்த்திராத ஓர் விலையினை கொடுத்திருந்தன. குறிப்பாக ஜேர்மன், இத்தாலி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் கண்மூடித்தனமான போர் நடவெடிக்கைகளினால் இந் நாடுகளை கட்டுப்படுத்த பல நாடுகள் கைகோர்த்தன இவைகளுக்கு இடையே கடுமையான போர் நடைபெற்றது.

போருக்கான காரணங்களாக ஜேர்மனியின் விஸ்தரிப்புக் கொள்கை மற்றும் அதனுடன் கைகோர்த்த இத்தாலியின் நடவெடிக்கைகள் ஐரோப்பவில் போரினை ஆரம்பிக்க ஆசியாவில் ஜப்பனின் நடவெடிக்கைகள் போரினை விஸ்தரித்தது. தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவும் போரில் கலந்து கொண்டது.

ஐரோப்பாவில் ஆரம்பித்த இப் போர் படிப்படியாக பரவி ஆசிய ஆபிரிக்க அமெரிக்க அவுஸ்ரேலிய என அனைத்துக் கண்டங்களுக்கும் பரவியது.

இப் போரினால் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அதனை விட ஊனமுற்றோர் தொகையும் உயிரிழந்தவர்கள் தொகையினை விட அதிகமாகும், கணக்கிட முடியாத அளவு சொத்துக்கள் அழிக்கப்பட்டது.
மேலும் இரண்டாம் உலகப்போரில் முதன் முறையாக அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் சொல்ல முடியாத அளவு துன்பத்தினை அனுபவித்து வருகின்றனர். மேலும் அணுகுண்டு பாவனையின் தாக்கம் இன்று வரை கணாப்படுகின்றது என்பது மற்றுமோர் கவலையான அம்சமாகும்.

இப்பதிவில் காணப்படும் குறிப்புக்கள் PDF வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே அழுத்தவும் இரண்டாம் உலக மகா யுத்தம்
(இக் குறிப்புக்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்)


இப் போருகான காரணங்கள் பற்றிய குறிப்புக்கள் மற்றும் முக்கிய விடயங்களினை கீழே காணப்படும் பதிவில் விளக்கப்பட்டுள்ளது.



இரண்டாம் உலகப் போரின் பரவல் பற்றிய சிறு குறிப்புக்கள் மற்றும் அதன் விளக்கம் கீழே காணப்படும் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.






இரண்டாம் உலக மகா யுத்ததின் விளவுகள் பற்றி இப் பதிவில் விளக்கப்பட்டுள்ளது. 


தரம் 11 மாணவர்கள் கட்டாயம் அறிந்திருப்பது அவசியமாகின்றது. உலப் போர் பற்றிய வினாக்கள் கா.பொ.தா சாதாரன தர பரீட்சையின் போது பகுதி 1 மற்றும் பகுதி 3லும் வினவப்படுகின்றன.